தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 11.20 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 11.80 கோடி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் உட்பட நாட்டின் 117 மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.