லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கிழக்கு லடாக்கில் நிலவும் மோதலைத் தீர்ப்பதற்காக 13-வது சுற்றுப் படைத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்த வாய்ப்புள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, பேச்சுவார்த்தைகள் எதையும் தீர்க்குமா என்று மக்கள் சந்தேகப்பட்டனர், ஆனால் எங்கள் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார்.
மேலும் லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது. நாங்கள் அவர்களின் அனைத்து அசைவுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், உள்கட்டமைப்பு மற்றும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்றங்களையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில், எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்