டெல்லி:-
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சீனத் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள் 20 பேரின் பட்டியலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
1.நைப் சுபேதார் சத்னம் சிங்
2.நைப் சுபேதார் மந்திப் சிங்
3.சிப்பாய் குந்தன் குமார்
4.சிப்பாய் அமன் குமார்
5.நாயக் தீபக் சிங்
6.சிப்பாய் சந்தன் குமார்
7.சிப்பாய் கணேஷ் ஹஸ்தா
8.சிப்பாய் கணேஷ் ராம்
9.சிப்பாய் கே.கே. ஓஜா
10.சிப்பாய் ராஜேஷ் ஒரூன்
11.சிப்பாய் சி.கே.பிரதான்
12.நைப் சுபேதார் நந்து ராம் சோரென்
13.ஹவில்தார் சுனில் குமார்
14.கர்னல் பி.சந்தோஷ் பாபு
15.சிப்பாய் ஜெய் கிஷோர் சிங்
16.ஹவில்தார் பிபுல் ராய்
17.சிப்பாய் குர்தேஜ் சிங்
18.சிப்பாய் அன்குஷ்
19.சிப்பாய் குர்விந்தர் சிங்
20.ஹவில்தார் கே.பழனி
ஆகியோர் உயிரிழந்ததாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.