திருவனந்தபுரம்
ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பாடம் பயின்று வந்த முதியவர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், கோட்டயம் மாவட்டம் அய்யர் குன்னம் பகுதியைச் சேர்ந்த 104 வயதான குட்டியம்மாவும் தேர்வை எழுதியுள்ளார்.
இந்த தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வில் குட்டியம்மா பாட்டி 100க்கு 89 சதவீதமதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
குட்டியம்மாள் பாட்டி தன் வாழ்நாளில் பள்ளிகூடத்திற்கே செல்லாதவர். இவர் தற்போது 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று 89 சதவீத மார்க் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.