இந்தியா

Go Corona Go- 3 லட்சம் மாத்திரைகள் 10,000 மாஸ்க்குகள்- அதிரடி வழிபாடு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் இந்தியாவில் விரைவில் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒருசில மாநிலங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.

இதனிடையே, பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் மக்கள் வித்தியாசமாக வழிபாடு நடத்தியுள்ளனர்.

ALSO READ  இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

இதன்படி, 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு பிராமாண்டமாக சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.

இந்த வினோத வழிபாட்டில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கஞ்சா கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கிய நபர்; நுரையீரலில் சிக்கிய 20 சென்டிமீட்டர் கத்தி… 

naveen santhakumar

கொரோனாவை கட்டுப்படுத்த யோகியிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா..!

naveen santhakumar

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம் – மன்னிப்புக்கோரியது கூகுள்…!

naveen santhakumar