தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வாகனங்கள் தேவையில்லாமல் ஒலி எழுப்புவதை தவிர்ப்பதற்காக பெங்களூரில் No Honking சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களிலிருந்து தேவையில்லாமல் ஒலி எழுப்புவதன் மூலமாக அதிக அளவில் ஒலி மாசு ஏற்படுகிறது. இந்த ஒலி மாசை தவிர்ப்பதற்காக பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று 100 கிலோ மீட்டர் No Honking சவாலை அறிவித்துள்ளது.
இதன்படி 100 கிலோ மீட்டர் தூரம் வரை ஒலி எழுப்பாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும் ஒருவேளை ஒலி எழுப்பினால் 100 கிலோ மீட்டர் தூரத்தை பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்த சவாலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒலி மாசை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.