பீகார்:
ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பீகாரின் கல்வியமைச்சர் மேவாலால் சௌத்ரி.
நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, 7வது முறையாக பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.
இதனிடையே நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் உள்ள சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டினை சாடினர். இதன் காரணமாக இரு கட்சியினரிடையேயும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் பீகாரின் கல்வியமைச்சராக இருந்த மேவாலால் சௌத்ரி தாமாக முன்வந்து முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். பதவியேற்ற மூன்றே நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பீகார் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.