பாட்னா:-
பொது இடங்களில் புகையிலை அல்லது புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதன் ஒருபகுதியாக பீகார் அரசு பொது இடங்களில் புகை இலை அல்லது வாசனைப் பொருட்களை மென்று துப்பினால் 6 மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பொது இடங்களில் புகையிலையை மென்று துப்பினால் யானைக்கால், காச நோய், பறவைக் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவுகின்றன.
இதைத் தடுக்கும் நோக்கில் பான் மசாலா உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலைப் பொருள்களையும் மென்று பொது இடங்களில் துப்புவது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 268 மற்றும் 269 இன் படி தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ¼ பங்கினருக்கு (25.9 %) புகையிலை உபயோகிக்கும் பழக்கம் உள்ளதால் இந்த உத்தரவை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
பீகாரின் வடக்கு பகுதியில் உள்ள வைஷாலி, சமஸ்டிப்பூர் மற்றும் சீதாமர்ஹிஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் புகையிலை தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.