பீகார் மாநிலம் பாட்னாவில் கால்நடை கொட்டகைலிருந்து எருமையை அவிழ்த்துவிட்ட இளைஞரை பசு திருடனாக நினைத்து ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது
புதன்கிழமை 3:00 மணிக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள புல்வாரிஷரிப்பில் கால்நடை கொட்டகையிலிருந்த எருமையை முகமது ஆலம்கீர் அவிழ்த்து விட்டதை கண்டவுடன் அவரை பசு திருடன் என நினைத்து ஒரு கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் அவருடன் இருந்த ஒருவர் தப்பித்துவிட்டார் பல மணி நேரம் தாக்குதலுக்குப் பிறகு முகமது ஆலம்கீர் புதன்கிழமை பிற்பகல் மருத்துவமனையில் காலமானார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 6 குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பசு காவலர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவம் குறித்து பேசியிருந்தார், அதில் பசுக்கள் மீதான பக்தியால் பசு காவலர்கள் மக்களைக் கொல்வது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் கூறினார்