கடந்த மார்ச் மாதம் தமிழகத்தை போலவே கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கேரளாவில் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களில் முதல்வர் பினராயி விஜயனை தவிர மற்ற 20 அமைச்சர்களும் புதுமுகங்களாக உள்ளனர். எளிய முறையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.