இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முதல் எம்.பி. எம்.எல்.ஏ. வரை கொரோனாவை தடுப்பதற்கு விஞ்ஞானி சிந்தையில் கூட உதிக்காத பல அறிவுரைகளை கூறி வருகின்றனர்.
அந்தவகையில் பாஜகவை சேர்ந்த எம்.பி பிரக்யா தாகூர் கொரோனாவை தடுப்பதற்கு வியாக்கத்தக்க ஆலோசனையை கூறியுள்ளார். இது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், நாம் தினமும் கோமியத்தைக் குடித்தால், அது கொரோனாவினால் ஏற்படும் நுரையீரல் தொற்றை குணப்படுத்தும். நான் மிகவும் வலியில் உள்ளேன், இருப்பினும் நான் தினமும் கோமியத்தைக் குடிக்கிறேன்.
அதனால் இப்போது, கொரோனாவிற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. எனக்கு கொரோனாவும் இல்லை” எனக் கூறியுள்ளார். தற்போது இவரின் கருத்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.