சண்டிகர்:-
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பஞ்சாப் அருகே Tutionக்கு போ என பெற்றோர்கள் வற்புறுத்தியதால் சாலையில் நின்றுகொண்டிருந்த போலிஸிடம் புகார் செய்து. ஒட்டுமொத்த போலிஸ் படைகளையும் டியூஷன் எடுத்த வீட்டிற்கு அழைத்து வந்த சிறுவனால் பரபரப்பு.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நபரொருவர் ஊரடங்கு நேரத்தில் இரண்டு சிறுவர்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தார். இதை கண்ட அவரை தடுத்து நிறுத்த போலீசார் காரணம் கேட்டனர்.
அப்போது அங்கே இருந்த குருதாஸ்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் குருதிப் சிங்கிடம் 5 வயது சிறுவன் ஒருவன் இந்த ஊரடங்கு நேரத்தில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்காமல் நபரொருவர் டியூஷன் எடுத்து வருவதையும் அதற்கு தான் தங்களை அழைத்து செல்வதையும் போலீசாரிடம் கூறினான்.
அந்த நபர் எவ்வளவு பேசக்கூடாது என்று தடுத்தும் சிறுவன் எதையும் கண்டுகொள்ளாமல் அனைத்தையும் போலீசாரிடம் கூறினான். அதோடு போலீசாரையும் டியூஷன் எடுக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
வீட்டிற்கு அழைத்து சென்றதோடு வெளியே இருந்து தனது ஆசிரியரையும் குறிப்பிட்டுள்ளான். வெளியே வந்து கதவை திறந்து பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஏனெனில் மொத்த போலீஸ் படையும் அங்கே குவிந்து இருந்தது.
துணை காவல் கண்காணிப்பாளர் குர்திப் சிங் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் ஊரடங்கு நேரத்தில் உங்களுக்கு டியூஷன் எடுப்பதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார். இதையடுத்து வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.