மணப்பெண் காலில் மாப்பிள்ளை விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ இணையத்தை வெகுவாக கலக்கி வருகிறது
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இதனால் இந்தியாவில் திருமணத்திற்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.
இந்திய திருமணங்களில் தாலி கட்டிய பின்னர் மணமகன் காலில் விழுந்து மணமகள் ஆசிர்வாதம் வாங்குவார்
காலம் காலமாக ஆண்களின் காலில் விழுந்து பெண்கள் வணங்கும் இந்த வழக்கத்தினை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பின்பற்ற வேண்டுமா என முற்போக்குவாதிகளும் பெண் உரிமை ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இந்நிலையில் இதனை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ளார் மாப்பிள்ளை ஒருவர் சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் மணமகன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போகிறார்
அவரை தடுத்து நிறுத்திய மாப்பிள்ளை உடனே மணமகளின் காலில் விழுகிறார்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் வெட்கத்தில் துள்ளிக்குதித்து நகர்கிறார்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
இதுவல்லவோ Couple’s Goal, இவர்கள் அல்லவோ Made For Each Other என்று இந்த க்யூட் கப்புள்ஸை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்….
அதிலும் தனது மனைவி காலில் விழுந்த மணாளனை தான் அதிகமாக பாராட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்