டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டி இந்தியா – பிரிட்டன் அணிகள் இடையே நடைபெற்றது. முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன . இந்திய பெண்கள் அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தார்.
பின்னர் 2வது கால்பகுதியில் ஆட்டம் சூடு பிடித்தது . இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோல் அடித்தனர். எனினும் அதில் பிரிட்டன் அணியே முன்னிலை வகித்தது.
இந்நிலையில், ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், 5 – 4 என பிரிட்டன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியினரால் வெண்கலப்பதக்கத்தை பெற முடியாமல் போனது.
கடைசி வரை போராடியும் பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை என, இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே அமர்ந்து கதறி அழுதனர்.
இந்நிலையில், பிரிட்டன் பெண்கள் ஹாக்கி அணி நிர்வாகம் சார்பில் ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது. அதில், என்ன ஒரு அற்புதமான போட்டி, என்ன ஒரு அற்புதமான எதிரணி இந்திய அணி. இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.
அடுத்த சில வருடங்களில் இந்திய அணியினருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளது. பிரிட்டன் அணியின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.