தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்
BSNL நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் மாதத்தில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களும் சேவை கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தன. உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வு பற்றி அறிவித்தன.
சமீபத்திய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது. எனினும், நிலுவை தொகையை செலுத்தும் பட்சத்தில் டெலிகாம் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், தொகையை செலுத்த நிறுவனங்கள் சார்பில் சலுகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்கள் நிலுவை தொகையை செலுத்த மார்ச் 2022 வரை அவகாசம் அளித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.