தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிட சிபிஎஸ்சி அமைப்பு குழு ஒன்றை அமைத்து உள்ளது.
இக்குழுவின் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜூலை 26 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அதற்கு முன்பே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.