புது டெல்லி :
2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடுகள் என்ற ஒன்றிய அரசின் தொலைநோக்குப்படி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2015ம் ஆண்டு முதல் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்கள் /மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
அநடைப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட கடந்த 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்.
மாநிலங்கள் தெரிவித்த திட்டத்தின் அடிப்படையில் சுமார் 113 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டன. இவற்றில் 84.40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்தார்..