மகாராஷ்டிர மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் ஹரி பாலாஜிக்கு மத்திய அரசின் அதி வீர தீர செயலுக்கான விருது கிடைத்துள்ளது
இந்த அதி வீர தீர செயலுக்கான விருது பெறுவது என்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. மிகப்பெரிய சாதனைகளை புரிந்தவர்களுக்கு தான் இந்த அதி தீவிர வீர செயல் விருது கிடைக்கும் .
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிவரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஹரி பாலாஜிக்கு இந்த விருது 2 வது முறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஹரி பாலாஜிக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தவர். பின்பு யு .பி.எஸ்.சி தேர்வு எழுதி 2013ம் ஆண்டு காவல்துறை பணியில் மகாராஷ்டிர மாநிலத்தில் பொறுப்பேற்றார்.
ஹரி பாலாஜிக்கு தொடர்ந்து நக்சல்கள் எதிர்ப்பு நடவடிக்கை தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். 60 என்கவுண்டர் சம்பவங்களில் 174 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்ட்டார்கள். இச்சம்பவம் மே 2017 2019 ஜூலை முடிய நடைபெற்றதாகவும் 2018 ஆம் ஆண்டு மட்டுமே 50 நக்சல் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஹரி பாலாஜியின் வீரதீர செயலைப் பாராட்டினார்கள். 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் குடியரசு தினவிழாவில் ஹரி பாலாஜிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வீரதீர செயல்களை கௌரவிக்கும் பதக்கத்தை வழங்கியதும் தற்போது இரண்டாவது முறையாக சுதந்திர தின விழாவில் மீண்டும் அவருக்கு வீர தீர செயல் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.