தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் 1987ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்திய குடிமக்கள்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவிக்கையில், 2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி ஒருவரின் தாயோ (அ) தந்தையோ இந்தியராக இருந்தால் அவர் இந்திய குடிமகனாக கருதப்படுவார். மேலும் 1987ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்திய குடிமக்களாக கருதப்படுவர். அசாமில் மட்டும் இது 1971ம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்பவர்கள் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை, கருத்துக்கள் தெரிவித்தால் அதை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.