தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார். மேலும் பல விவசாயிகள் தாக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் கோபமான விவசாயிகள் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகளை டெல்லி நோக்கி அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனைத் தடுக்கும் நோக்கில் நேற்று (31.01.21) இரவு 11 மணி வரை இணைய சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை நாளை இரவு வரை இந்தத் தடை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.