தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் காகிதம் இன்றி மின்னணு டிஜிட்டல் முறையிலான ஸ்மார்ட் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனையடுத்து பேசிய அவர்,” இதுவரை இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். பொது முடக்கத்தால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தைச் சந்திக்க நேர்ந்திருக்கும். கொரோனா காலத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் உலக நாடுகளுக்கு முன் மாதிரியாக தெரிகிறது. மேலும் கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி எனவும் கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டும் இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.