கேரளாவில் தனியார் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி பேருந்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் அறக்கட்டளை சார்பாக ஆறு மாதங்களுக்கு தடுப்பூசி மையமாக பயன்படுத்த பேருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் சிறப்பு அம்சமாக தடுப்பூசி போட வருபவர்கள் படிக்க ஒரு புத்தக அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை முதலமைச்சர் பினராயி விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதனிடையே நாளை (அக்டோபர் 1) முதல் முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.