இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2104 பேர் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சோகமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நெருக்கடி என்பது கொரோனா மட்டுமல்ல; மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் தான். பொய்யான கொண்டாட்டங்களும், வெற்றுப்பேச்சு வேண்டாம். நாட்டிற்கு ஒரு தீர்வை கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.