இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இந்த தொற்றுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61,160 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 848 ஆகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.