இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாகி வருகிறது.
தொற்று பரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்நோயினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients #Punjab #PunjabLockdown #Delhi