இந்தியா

கொரோனா தடுப்பூசி – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்கள் பங்கு முக்கியமானது சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பாராட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி :

கொரோனா நீண்ட கால போராட்டம் என்பதால், அதில் மன நிறைவுக்கு வாய்ப்பில்லை எனவும், நேர்மறையான செய்திகள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்க முடியும் என்பதால் ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள், சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் யுனிசெப்புடன் இணைந்து, பத்திரிகை தகவல் அலுவலகம், கள விளம்பர அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி அதிகாரிகள் மற்றும் நிருபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இன்று நடத்தியது.

ALSO READ  பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !
Lav in the time of COVID-19: Meet the ex-IITian who is the face of India's  response- The New Indian Express

நேர்மறையான செய்திகள் மூலம், கோவிட் தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்க முடியும் என்பதால், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய்களை களைந்து, உண்மைகளை தெரிவிப்பதன் மூலம், மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்குவதில் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகின்றன என்று சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MOSTBET AZ CASINO MOSBET KAZIN

Shobika

ஹிந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையால் சர்ச்சை- பின்வாங்கியது ஜிப்மர்…! 

naveen santhakumar

Kasyno I Książka Sportowa W Polsce ᐈ Oficjalna Stron

Shobika