கொரோனா தடுப்பூசியில் பசுவின் இரத்தம் கலந்துள்ளதா என்பதனை தெளிவுபடுத்துமாறு விளக்கம் கேட்டுள்ளார் அகில இந்திய இந்து மகா சபை தலைவர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக அகில இந்திய இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘’ஆங்கிலேய ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கி தோட்டாக்களை கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியதுபோல், தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலுக்குள் அனுப்பி இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சர்வதேச சதி நடக்கிறது.
ஆகையால் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முன், அதில் பசு ரத்தம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அரசும் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவிக்க வேண்டும்’’ என சுவாமி சக்ரபாணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்