கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே மூன்றாம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதோடு ஏப்ரல் 20 முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற e-commerce நிறுவனங்கள் தற்பொழுது ஏப்ரல் 20 முதல் அத்தியாவசிய மற்ற பொருட்களையும் வினியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை மருந்துகள் மருத்துவ கருவிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு இந்த தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேவைத் துறைகள் முடக்கம் அடைந்துள்ள காரணத்தால் டிஜிட்டல் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதேபோல இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் ஒரு உதவியாளரோடு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் தகுந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆதாரங்களுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
காலியான சரக்கு வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து பொருட்களை எடுப்பதற்கும் பொருட்களை சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கி வைத்த பிறகு காலியாக வரும் வாகனங்களையும் அனுமதிக்கிறார்கள்.