கஞ்சம்:-
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் உயிரிழந்துள்ளனர், 292 பேர் மீண்டு உள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருத குலங்கே (Vijay Amruta Kulange):-
மாஸ்க்குகள் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். நகர்ப்புறங்களில் 1000 ரூபாயும், கிராமப்புறங்களில் 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்றார்.
மேலும் மாஸ்க்குகளுக்கு பதிலாக கைக்குட்டைகளையோ, ஸ்கார்ஃப்களையோ அல்லது ஏதேனும் காட்டன் துணியையோ கொண்டு வாய் மற்றும் மூக்கு பகுதியில் கட்டாயம் மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா மாநில அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் (Mission Shakti Programme) கீழ் மகளிர் சுய உதவி குழுக்கள் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 50,000 முக கவசங்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
இதுவரையில் 400க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க்குகளை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து உள்ளனர்.
பெர்ஹம்பூர் Berhampur) மாவட்டம் குகுதகண்டி Kukudakhandi) வட்டம் பகலாடட்டி Baghalati) கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடியா சாஹி Matia Sahi) என்ற கிராமம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறிய பெர்ஹம்பூர் துணை கலெக்டர் தத்தாத்ரேய பௌசாஹிப்:-
இந்த கிராமத்தில் 130க்கும் அதிகமான மாவட்ட தலைநகர் புவனேஸ்வரத்தில் இருந்து வந்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.