பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ‘zomato’ மதுபானங்களை நேரடியாக டெலிவரி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் சமூக இடைவெளிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
உணவை தவிர்த்து ‘zomato’ நிறுவனம் வீடுகளுக்கான மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதை ஊரடங்கு காலத்தில் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து மதுபானங்களை டெலிவரி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக Zomato நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) மோகித் குப்தா International Spirits and Wines Association of India (ISWAI)-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆனால் மதுவகைகளை நேரடியாக டெலிவரி செய்ய அரசு அனுமதி இல்லை என்பதால் அதனை பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ISWAI தலைவர் அமீர் கீரன் சிங் கூறுகையில்:-
இவ்வாறு வீடுகளுக்கு நேரடியாக மது விற்பனையை அனுமதிப்பதன் மூலம் நல்ல வருவாய் கிட்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் சட்டபூர்வமாக மது அருந்துவதற்கான அனுமதிக்கப்பட்ட வயது 18 லிருந்து 25 என்று வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.