இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் மாநிலத்தில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலிலும், இந்தூரிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் 31ஆம் தேதி வரை ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.