பெங்களூரு:-
கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ரூபா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா (Roopa Divakar Moudgil) தற்பொழுது ரயில்வே ஐஜியாக உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கர்நாடக மாநில உள்துறை முதன்மைச் செயலாளராக (Principal Secratary To Govt) நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி ரூபா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை முதன்மைச் செயலாளராக (PCAS) இருந்த 1995 ஆம் ஆண்டில் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இருந்த உமேஷ் குமார், பொருளாதார குற்றப் புலனாய்வு துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதை கண்டுபிடித்தார். இது, பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சர்ச்சை காரணமாக ரூபா இந்திய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.