சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. உலகின் பல நாடுகளில் இரண்டாவது மூன்றாவது அலை என தனது நீண்ட நெடிய பயணத்தை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வாகையில் தற்போது சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகம் பரவி வருகிறது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வருகிறது. மேலும் நாட்டில் மூன்றாம் அலை கண்டிப்பாக வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் வரப்போகும் மூன்றாவது அலையை தடுப்பதற்கு மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இது தொடர்பாக வர வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுவதுடன், அது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். எனவே சிங்கப்பூருடனான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதில் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.