இந்தியா

டெல்லி வன்முறை குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.. செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டதால், பதற்றமான சூழல் நிலவியது. இதனால் டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ALSO READ  "வலிமை" படத்தின் இறுதி சண்டைக்காட்சி; கார்த்திகேயா வெளியிட்ட அப்டேட் !

இந்நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த உயர்மட்ட கூட்டத்தில், டெல்லியில் கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெய்ரூட்டை போலவே மும்பையில் 76 ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு…

naveen santhakumar

மது பிரியர்களுக்கு ஷாக்…தடுப்பூசி போட்டவர்களுக்கே இனி சரக்கு….

Shobika

Ставки на спорт онлайн букмекерская компания 1xBet ᐉ 1xbet1.co

Shobika