டெல்லி,
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது டெல்லி போலீஸ் தலைமை காவலர் ரத்தன் லால் (42) கொல்லப்பட்டார்.
அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறந்த ரத்தன்லாலின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் J.P. நட்டா:-
டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட ரத்தன்லாலுக்கு தியாகிக்கான கவுரவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.