பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சிபெட் – பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத் தார்.
நாடு முழுவதும் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படும். இதற்காக தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ் மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 2,500 ஆரோக்கிய மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.
இந்தியாவில் திறன்வாய்ந்த சுகாதார ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் கடின உழைப்பால், திறமையால் கொரோனாவை வெற்றி கரமாக எதிர்கொள்ள முடிந்தது. குறிப்பாக, இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி என்ற மத்திய அரசு திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இதுவரை 88 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சவால்களுக்கு நடுவில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
சி.திவ்யதர்ஷினி