கோலார்:-
கர்நாடகாவில் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர் பாம்பை கடித்து கொன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் நாடே அமைதியாகி கிடந்த நிலையில் நேற்று முன் தினம் திறக்கப்பட்ட மதுக்கடைகளால் மீண்டும் பல அட்டகாசங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன.
40 நாட்களுக்கும் மேலாக தாங்கள் கடைபிடித்த விரதத்தை கலைத்துக்கொண்டு குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் முஸ்தூர் (Mustur) அருகே முல்பகல் (Mulbagal) கிராமத்தை சேர்ந்த குமார் (38) என்ற இளைஞர், மதுக்கடையில் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு பைக்கில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். வரும் வழியில் பாம்பு ஒன்று அவர் வண்டியில் சிக்கி அடிபட, குமார் அதனை கையில் எடுத்து யாரும் எதிர்பாராத வகையில் துண்டு துண்டாக கடிக்க ஆரம்பித்தார்.
இதனை வீடியோவாக பதிவுசெய்த பலரும் இணையத்தில் பதிவிட, பலரும் குடி மக்களை எங்கு சென்று விடப்போகிறதோ உள்ளிட்ட பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.