தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜம்மு- காஷ்மீரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது..
ஜம்மு காஷ்மீர் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் இன்று காலை 7.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. ஆனால் சில இடங்களில் மட்டும் வீடுகள் லேசான அதிர்வுகுள்ளானதாக கூறப்படுகிறது . இதனால் மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள உத்தம்பூர்,தோடா, ரேசாய், கிஸ்ட்வா மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.