டெல்லி:-
அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கல்லூரிகள் செயல்படாமல் உள்ளன, இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர்.
இதனிடையே, வரும் 16 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என புதுச்சேர்யில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் மமுடிவெடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஆகஸ்டு 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்கவும், முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.