குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. அதனால் குழந்தைகளின் பெயரை பெற்றோரே ஆன்லைனில் விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதனை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறுவதால் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த விண்ணப்பம் தானாகவே அங்கீகரிக்கப்படும் எனவும் டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.