டெல்லி:-
பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தது. இதற்கான நிதி பற்றாக்குறையை பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பெற முடிவெடுத்தது.
இந்நிலையில் தனியார்மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியலை நிதி ஆயோக்கிடம் வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்டரல் பேங்க் ஆஃப் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன.
இதனைத் தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.
இவர்கள் அளித்த மனுவுக்கு பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.