பெங்களூரு:-
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எடியூரப்பா மட்டுமல்லாது அவரது மகள் பத்மாவதி மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மற்றும் மற்றொரு மகள் உமாதேவி ஆகியோருக்கு தொற்று இல்லை.
இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே தன்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சித்தராமையா ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக கர்நாடகாவில் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டில் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.