தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரா:-
மதுராவில் சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கிக்கொண்ட பேருந்தில் இருந்து பயணிகளை கழுத்தளவு தண்ணீரில் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வடஇந்தியாவில் உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே சுரங்கப்பாதையில் மழைநீரில் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் மதுரா போலீசார் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் கழுத்தளவு நீரில் பேருந்தில் சிக்கிக்கொண்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர். விரைந்து செயல்பட்ட மீட்ட போலீஸாரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.