தமிழகம் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை போல கேரளாவிற்கு வரும் 6 தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக உள்ளிட்ட காட்சிகள் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவில் பிரச்சாரம் மேற்கொணடர். அப்போது அவர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில் அரசு தலையிடக்கூடாது என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சுற்றுலா மற்றும் வளர்ச்சியின் முன்மாதிரியாக கேரளா கருதப்பட்ட காலம் இருந்தது. இது அதிகம் படித்த, அமைதி நேசிக்கும் மாநிலமாக அறியப்பட்டது. இப்போது இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகள் கேரளாவை ஊழலின் மையமாக ஆக்கியுள்ள து என கூறினார்.
மேலும் கோவில்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசுகள் தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. அதனை, பக்தர்களிடமே விட்டுவிடவேண்டும் என்றார். போலீஸ் உடையணிந்த கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், சபரிமலை பக்தர்களைத் தவறாக நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினார்.
#centralgovt #Kerala #keralaAssemblyelection #KLelection2021 #cpi #CPM #BjP #kerala #pinaryivijayan #TamilThisai #Amitshah #narendramodi