தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் தேவை அதிகரிப்பு காரணமாக சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் ஆல்கஹால் அடிப்படையிலான (Alcohol Based) சானிடைசருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சாதாரண சோப்பு கொண்டும் கைகளை கழுவி சுத்தப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சானிடைசர் தேவையை கருத்தில் கொண்டு அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சில மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், வெண்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.