இந்தியா

நீட் தேர்வு-காதல் தோல்வி…..ஹெச்.ராஜா கேள்வி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீட் தேர்வு பயத்தால் பலரும் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அதற்கு எதிராக ஹெச்.ராஜா பேசியுள்ளார். 

நீட்(NEET) எனும் மருத்துவ நுழைவுத்தேர்வால் பல கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவும் பலியாகி வருகிறது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தினாலும், மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர் பலியாகியுள்ளது.சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று துர்கா தேவி மற்றும் ஆதித்யா என்ற இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்கிறது.

ALSO READ  பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை:

இந்நிலையில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ‘ஆண்டுதோறும் +2 தேர்வு முடிவுகள் தோல்வியால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல காதல் தோல்வியாலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய சட்டம் போட முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன் முதலாக விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு இட்லி,Egg Roll,அல்வா

Admin

கையைப் பிடித்ததால் நின்று போன திருமணம்:

naveen santhakumar

இந்த அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட்:

naveen santhakumar