திருமண விழாவில் நீண்ட நேரமாக உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்துள்ளார்.
தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது நண்பனையே திருமணத்திற்கான போட்டோகிராபராக அமர்த்தியுள்ளார்.
ஆனால் திருமணத்தன்று காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அவருக்கு உணவு வழங்கப்படவில்லை, இதனால் கடும் கோபமடைந்த அந்த நபர் மணமகனான தனது நண்பன் கண்முன்னேயே திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து படங்களையும் டெலிட் செய்துள்ளார்.
மணமகன் எனது நண்பன் என்பதாலேயே குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை புகைப்படங்களை எடுத்தேன். ஆனால் புகைப்படம் எடுப்பதற்காக என்னை சாப்பிடவிடவில்லை.
இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனாலேயே மணமகன் முன்னாலேயே எடுத்து அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டேன் என்று அந்த புகைப்படக்காரர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.