மாஸ்கோ:-
இந்தியா-சீனா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில் இந்தியாவுக்கு சுகோய், சு 30 எம்.கே.ஐ. மிக்யோன் குயரெவிச் மிக் 29 போன்ற போர் விமானங்களை விரைவில் வழங்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா -ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன. இதன் மதிப்பு 6000 கோடி என்று கூறப்படுகிறது.
இதில் 12 சுகோய் விமானங்களும் 21 மிக் 29 விமானங்களும் அடங்கும். விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சுகோய் ரக விமானங்களை இந்திய விமானப்படை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. சீன துருப்புகளின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் தற்பொழுது இந்திய வான்படை கண்காணித்து வருகிறது.