தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
டெல்லி ஐ.ஐ.டி (IIT) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள PCR கொரோனா சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
இது குறித்து டெல்லி ஐஐடி பேராசிரியர் பெருமாள் கூறுகையில்:-
கடந்த ஜனவரியில் இதற்கான ஆய்வு துவக்கப்பட்டு 3 மாதங்களில் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான செலவில் இந்த கிட்டுகளை வணிக ரீதியில் சந்தைப்படுத்த முடியும். இப்போது இருக்கும் எல்லா கொரோனா PCR கிட்டுகளைவிடவும் இது செலவு குறைவானது. மேலும், நாட்டிலேயே ICMR அங்கீகாரம் பெற்ற கிட்டை உருவாக்கிய முதல் கல்வி நிறுவனம் என்ற பெருமையும் டெல்லி ஐஐடி க்கு கிடைத்துள்ளதாக கூறினார்.
இந்த கருவியை ஐஐடி டெல்லியில் உள்ள Kusuma School Of Biological Sciences (KSBS) உருவாக்கியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.