கரக்பூர்:-
ஒரு மணி நேரத்தில் துல்லியமான முடிவுகளை காட்டும் அல்ட்ரா போர்ட்டபிள் கொரோனா பரிசோதனைக் கருவியை கரக்பூர் ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவிக்கு Novel Technology for COVID-19 Rapid Test என்ற என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் 400 ரூபாய் ஆகும். இதனை எளிதாக கையாளலாம். மேலும் இவை மிகவும் சிறிய கருவிகளாகும் (Ultra Portable). இந்தக் கருவிகள் மூலமாக வெறும் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறலாம்.
இந்தக் கருவியில் சிறப்பு என்னவென்றால் நமது ஸ்மார்ட்போன்கள் உடன் இணைத்து அவற்றின் மூலம் பரிசோதனை முடிவுகளைப் பெறலாம்.
உமிழ்நீரை (Saliva) பயன்படுத்தி ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரா? இல்லையா? என்பதை கண்டறிய பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் செயலியை ஸ்மார்ட்போன்களில் தரவிறக்கம் செய்து இந்தக் கரையோடு இணைத்து ஒரு மணி நேரத்தில் முடிவுகளைப் பெறலாம்.
கரக்பூர் ஐஐடி, (IIT Kharagpur) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை (Department of Mechanical Engineering) பேராசிரியர் சுமன் சக்கரவர்த்தி (Suman Chakraborty) மற்றும் கரக்பூர் ஐஐடி உயிர் அறிவியல் துறை (School of BioSciences) துணைப்பேராசிரியர் அரிந்தம் மொண்டல் (Arindam Mondal) ஆகியோர் இந்த கருவியை அறிமுகப்படுத்தி இதன் செயல் விளக்கங்களை செய்து காட்டினார்கள்.
இந்த கருவி குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் இந்த கருவி கொரோனா வைரஸ் மட்டுமல்லாது மற்ற RNA வைரஸ்களையும் கண்டறியும். மேலும் இந்த கருவியில் காகித கேட்ரிட்ஜ் (Paper Cartridge) பயன்படுத்துவதால் ஒரு சோதனை முடிந்த பின்னர் எளிதாக மற்றொரு காகித கேட்ரிட்ஜை பயன்படுத்தலாம் என்றனர்.